spot_img
HomeNewsமணிரத்னம் படத்தில் இருந்து தொடர்ச்சியாக வெளியேறி அதிர்ச்சி கொடுத்த ஹீரோக்கள்

மணிரத்னம் படத்தில் இருந்து தொடர்ச்சியாக வெளியேறி அதிர்ச்சி கொடுத்த ஹீரோக்கள்

இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி முடித்துவிட்டு தற்போது கமல் நடிக்கும் தக் லைப் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமலுடன் முக்கிய வேடங்களில் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

எல்லா ஹீரோக்களும் மணிரத்னம் படங்களில் நடிக்க விரும்புவது போலவே கமலுடன் இணைந்து நடிக்கவும் எந்த நடிகர் மாட்டேன் என்று சொல்வார் ? அதனால் ஆவலுடன் இந்த இரண்டு இளம் ஹீரோக்களும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டனர். ஆனால் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே செல்கிறது.

காரணம் கமல் தற்போது தேர்தல் நெருங்கி விட்டதால் அரசியலிலும் கவனம் செலுத்தி, படப்பிடிப்பை இஷ்டத்துக்கு தள்ளி வைத்து விடுகிறாராம். இதனால் ஏற்கனவே துல்கர் சல்மான் தான் கொடுத்திருந்த தேதிகள் அனைத்தும் வீணானதால் இந்த படத்தில் இருந்து விலகுவதாக கூறி வெளியேறி விட்டாராம்.

அதேபோல தற்போது நடிகர் ஜெயம் ரவியும் இதே போன்று தனது கால்சீட் வீணாகி செல்வதால் இந்த படமே வேண்டாம் என்று விலகி விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவருமே மணிரத்னம் படத்தின் மூலம் ஓரளவு பெயர் பெற்றவர்கள் தான்.

தங்களது ஆஸ்தான குரு என்றாலும் கூட இப்படி கால்ஷீட் பிரச்சினை வரும்போது வேறு என்ன செய்ய முடியும் என்று இந்த இருவரும் அதிரடியாக இப்படி முடிவு எடுத்து விட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img