spot_img
HomeNewsவேட்டையாடு விளையாடு ரீ ரிலீஸ் ; தயாரிப்பாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்

வேட்டையாடு விளையாடு ரீ ரிலீஸ் ; தயாரிப்பாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்

கமல் நடிப்பில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான படம்’வேட்டையாடு விளையாடு’. ஸ்டைலிசான அதேசமயம் வித்தியாசமான போலீஸ் படமாக இந்த படம் உருவாகி இருந்தது. கமலும் வித்தியாசமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை அள்ளினார்.

இந்த படம் வெளியான சமயத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் அந்த படத்தை அப்போது தயாரித்த செவன்ந்த் சேனல் மாணிக்கம் நாராயணன் என்பவருக்கு இந்த படம் வெற்றி படமாக அமைந்தாலும் கூட ஏகப்பட்ட செலவு ஆகிவிட்டதால் லாபம் என பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. சொல்லப்போனால் நட்டத்தை தான் சந்தித்தார்.

இந்த நிலையில் ஹிட் படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கமல் நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படமும் ரிலீஸ் செய்யப்பட்டது. இரண்டாவது முறை ரிலீசான போதும் இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இப்போதும் 25 நாட்களுக்கு மேல் இந்த படம் நல்ல வசூல் உடன் ஓடியது. ஆனால் தயாரிப்பாளர் தனக்கு எந்த விதமான ஒரு லாபமும் இந்த படத்தின் மூலம் திரும்பவும் வரவில்லை என்று ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

படத்திற்கு தியேட்டர்களில் நல்ல கூட்டம் வந்தது. நானும் அதை கண்கூடாக பார்த்தேன். சந்தோஷமாக இருந்தது. ஆனால் படத்தை வாங்கி திரையிட்டவர்கள் இதுதான் லாபம் என ஒரு பைசா கூட எனக்கு கொண்டு வந்து தரவில்லை. இப்படி ரீ ரிலீஸ் செய்த போதும் இந்த படம் எனக்கு பெரிய அளவில் பயன்படவில்லை என்று விரக்தியுடன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img