spot_img
HomeNewsஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் விஜய் படத்தில் நடிக்க அஜித் சம்மதம்

ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் விஜய் படத்தில் நடிக்க அஜித் சம்மதம்

எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல் என ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு ஜாம்பவான்கள் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பது போல இவர்களுக்கு அடுத்ததாக இடம் பிடித்தவர்கள் தான் விஜய் மற்றும் அஜித் இருவரும். இதில் ரஜினி, கமல் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்திருந்தாலும் சிவாஜி, எம்ஜிஆர் இருவரும் கூண்டுக்கிளி என்கிற ஒரு படத்தில் மட்டும் தான் இணைந்து நடித்தனர்.

அதேபோல அஜித்தும் விஜய்யும் ‘ராஜாவின் பார்வையிலே’ என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் தங்களது ஆரம்ப காலகட்டத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு அவர்கள் இருவரும் தனித்தனியாக பயணித்து வருகின்றனர். இந்த படத்தை இயக்கியவர் ஜானகி சௌந்தர். இந்த படத்தை தயாரித்தவர் சௌந்தர பாண்டியன். அவர் அந்த சமயத்தில் அஜித்திற்கு நெருக்கமான நண்பராக இருந்தார்.

அப்போது ராஜாவின் பார்வையிலே படத்தை தான் தயாரிக்க இருப்பதாகவும் அதில் விஜய் ஹீரோவாகவும் அஜித் முக்கிய இடத்தில் நடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியபோது, உங்களுக்காக நான் இந்த படத்தில் ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடிக்கிறேன் என்று முழு மனதுடன் கூறி, அந்த படத்தில் நடித்தாராம் அஜித்.

ஆனாலும் அவருக்கான நியாயமான சம்பளத்தை தயாரிப்பாளர் சௌந்தர பாண்டியன் கொடுத்துவிட்டார். ஆனால் அதன் பிறகு அஜித், விஜய் இருவரையும் அவர் பயன்படுத்தாமல் போனதுதான் அவரது துரதிர்ஷ்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img