spot_img
HomeNewsவாரிசு நடிகர்கள் ஆதிக்கத்தை எதிர்த்து படத்திலேயே வசனம் பேசிய ஹீரோ

வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்தை எதிர்த்து படத்திலேயே வசனம் பேசிய ஹீரோ

 

சினிமாவை பொருத்தவரை அது பாலிவுட் என்றாலும் தமிழ், மலையாளம் என்றாலும் வாரிசு நட்சத்திரங்களின் வருகை இருந்து கொண்டே தான் இருக்கும். அதே சமயம் எல்லா வாய்ப்புகளும் அவர்களுக்கு செல்கின்றன என்றும் தனியாக வாய்ப்பு தேடி முன்னேறுபவர்களை இவர்கள் தடுக்கிறார்கள் என்றும் பொதுவாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.

ஆனாலும் இதுவரை எந்த ஒரு வாரிசு நடிகரும் தங்களது திறமை இருந்தால் மட்டுமே அவர்களால் தொடர்ந்து முன்னேற முடிந்திருக்கிறது. திறமை இல்லாதவர்கள் ஒன்று இரண்டு படங்களுடன் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் நடிகர் நிவின் பாலி படத்திலும் ஹீரோவாகவே நடித்திருந்தார். அதில் தொடர்ந்து நாளைந்து படங்கள் தோல்வி அடைந்த அவர் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க துவங்குகிறார். அப்போது அந்தப் படத்தில் அவர் வாரிசு நடிகர்களை கிண்டல் பண்ணி வசனம் பேசும் விதமாக காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி கிண்டல் பண்ணி வசனம் வைத்ததே ஒரு வாரிசு நடிகரும் இயக்குனருமான வினித் சீனிவாசன் என்பவர் தான். இந்த படத்தில் துல்கர் சல்மான், பகத் பாஸில், பிரித்திவிராஜ் ஆகியோரை பற்றி தான் பெயர் குறிப்பிடாமல் இந்த வசனம் இருந்தாலும் அப்போதைக்கு சிரித்து விட்டுப் போக மட்டுமே அந்த வசனத்தை வைத்திருக்கிறார்கள். சீரியஸாக அல்ல..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img