spot_img
HomeNewsநீங்களே இப்படி பண்ணினா எப்படிப்பா ? இளம் ஹீரோக்களிடம் சங்கடப்பட்ட பிரபல இயக்குனரின் மனைவி

நீங்களே இப்படி பண்ணினா எப்படிப்பா ? இளம் ஹீரோக்களிடம் சங்கடப்பட்ட பிரபல இயக்குனரின் மனைவி

பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களை வெற்றிகரமாக வெளியிட்டு முடித்துவிட்ட இயக்குனர் மணிரத்தினம் தற்போது கமலை வைத்து தக் லைப் செய்கிற படத்தை இயக்கி வருகிறார். நாயகன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 35 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்திருப்பதால் இந்த படம் குறித்து இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அது மட்டுமல்ல இந்த படத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார், ஜெயம் ரவி நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. பின்னர் அவர்கள் வெளியேறி விட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது. இப்போது சிம்பு நடிக்கிறார், சித்தார்த் நடிக்கிறார் என்று நாள் ஒரு செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் மீண்டும் துல்கர் சல்மானும் ஜெயம் ரவியும் இதில் நடிக்க இருக்கிறார்கள் என்கிற விதமாக செய்து வெளியாகி உள்ளது. இதன் பின்னணியில் மணிரத்தினத்தின் மனைவியும் நடிகையுமான் சுகாசினி தான்  இந்த இருவரையும் அழைத்து முன்னணி நடிகர்களான நீங்களே இப்படி திடீரென படத்தில் இருந்து விலகினால் என் கணவருக்கு இருக்கும் இமேஜ் என்னவாகும்..

படம் கொஞ்சம் முன்னே பின்னே தாமதம் ஆனாலும் நீங்கள் தான் அட்ஜஸ்ட் பண்ணி இந்த படத்தில் நடித்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்கள் இருவரும் மீண்டும் இந்த படத்தின் நடிக்க ஒப்புக் கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

கமல்ஹாசன் சினிமா, அரசியல் இரண்டையும் போட்டு குழப்பிக் கொண்டிருப்பதால் அவரால் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆகிறது என்றும் அதனால் தங்களது கால்சீட் வீணாகிறது என்கிற காரணத்தினால் இந்த இருவரும் வெளியேறினார்கள் என்றும் சொல்லப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img