spot_img
HomeNewsசிவக்குமாரின் பேத்தியாக இருந்து இது கூட சாதிக்காவிட்டால் எப்படி ?

சிவக்குமாரின் பேத்தியாக இருந்து இது கூட சாதிக்காவிட்டால் எப்படி ?

சீனியர் நடிகர் சிவகுமார் எந்த மேடையில் பேசினாலும் அழகிய தமிழில் ஆங்கில கலப்பு இல்லாமல் பேசக்கூடியவர். மனப்பாடமாக திருக்குறளை சொல்வார். ராமாயணம் மகாபாரக் கதைகளை சொல்வார். இப்படி தமிழில் புலமை வாய்ந்த அவருக்கு அவருடைய பையன்களான சூர்யா, கார்த்தி இருவரும் கூட அழகாக தொடர்ந்து தமிழில் பேசக் கூடியவர்கள் தான்.

அதே சமயம் சூர்யாவின் மனைவியான ஜோதிகா மும்பையை சேர்ந்தவர். தமிழகத்திற்கு வந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்னும் மேடைகளில் முழுமையாக அவரால் தமிழ் பேச முடியவில்லை. இவர்களது குழந்தைகள் சிவக்குமார், சூர்யா போல தமிழில் தேர்ந்தவர்களாக இருப்பார்களா அல்லது ஜோதிகாவை போல தமிழில் அவ்வளவு புரிதல் இல்லாமல் இருப்பார்களா என பலருக்கும் கூட சந்தேகம் இருந்திருக்கலாம்.

அதற்கெல்லாம் விடை சொல்லும் விதமாக இன்று வெளியாகி உள்ள பிளஸ் 2 ரிசல்ட்தில் சூர்யா மகள் தியா தமிழில் 97 மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். அது மட்டுமல்ல அனைத்து பாடங்களிலுமே 95க்கு மேல் வாங்கி பிரமிக்க வைத்துள்ளார். பலரும் இது குறித்து சிவகுமாரின் பேத்தி என்றால் சும்மாவா, இதைக் கூட செய்யாவிட்டால் எப்படி என்று அவரை பாராட்டி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img