spot_img
HomeNewsசீச்சீ இந்தப் பழம் புளிக்கும்.. சாய் பல்லவி எடுத்த முடிவு

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்.. சாய் பல்லவி எடுத்த முடிவு

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற மூன்று நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சாய் பல்லவி. அதனை தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் வந்தாலும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து தென்னிந்தியாவிலேயே தெலுங்கில் தான் அதிக அளவில் ரசிகர்களை பெற்று வைத்துள்ளார் சாய்பல்லவி.

அவரது சொந்த மொழியான மலையாளத்தில் கூட அவர் நடிப்பதை குறைத்துக் கொண்டார். தமிழில் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடிக்கும் ஒரு படம் மட்டுமே இருக்கிறது. அதே சமயம் தெலுங்கில் சில படங்களில் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

இந்த நிலையில் தான் ஹிந்தியில் உருவாகும் ராமாயண் என்கிற படத்தில் நடிப்பதற்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் சாய்பல்லவி. சமீபத்தில் வெளியான அனிமல் படத்தில் மிருகத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நடிகர் ரன்பீர் கபூர் தான் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இவர் ராமனாக நடிக்க சீதா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தான் சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் முன்கூட்டியே தேதிகளை அவர்கள் வாங்கி இருந்தாலும் புராண படம் என்பதால் படப்பிடிப்பு துவங்க தாமதமாகி வந்தது. இதனால் வேறு படங்களுக்கு தேதி கொடுப்பதில் சாய்பல்லவிக்கு சிக்கல் ஏற்பட்டது.

போங்கடா நீங்களும் உங்க பாலிவுட்டும் என்பாத்து போல, சீச்சி இந்த பழம் புளிக்கும் என்று சொன்ன நரி போல அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டாராம் சாய் பல்லவி. ஆனாலும் அவரைத்தான் நாங்கள் சீதாவாக நடிக்க வைக்க போகிறோம் என்று படக்குழுவினர் பிடிவாதமாக இருக்கிறார்களாம்

Must Read

spot_img