spot_img
HomeNewsரிலீசுக்கு முன்னர் அமைதியாக இருந்த விஷ்ணு விஷால் இப்போது ஐஸ்வர்யா மீது குற்றம் சாட்டுவது ஏன்...

ரிலீசுக்கு முன்னர் அமைதியாக இருந்த விஷ்ணு விஷால் இப்போது ஐஸ்வர்யா மீது குற்றம் சாட்டுவது ஏன் ?

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அவரது தந்தை ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் திரைப்படம் வெளியானது. வழக்கமாக ரஜினி படங்களுக்கு தியேட்டர்களில் மிகப்பெரிய அளவில் கூட்டம் மொய்க்கும். ஆனால் இந்த படம் வெளியான தினத்தன்று முதல் நாளே பல திரையரங்குகளில் தியேட்டர்கள் காலியாக இருந்ததை சோசியல் மீடியா மூலம் பார்க்க முடிந்தது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேசமயம் ரஜினி முழு படத்திலும் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார் என்றால் அதற்கான வரவேற்பே தனி என்றும் இந்த படத்தில் கெஸ்ட் ரோல் என்பதால் ரஜினி ரசிகர்களிடமே பெரிய அளவில் சுவாரசியம் ஏற்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தை சரியாக புரமோட் செய்யாமல் விட்டதால்தான் படம் தோல்வியை தழுவியுள்ளது என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தின் தயாரிப்பாளரான லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரனிடம் முறையிட்டுள்ளாராம். இதை தொடர்ந்து சுபாஸ்கரன் இங்கே தயாரிப்பு நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருக்கும் தலைமை நிர்வாகியை கூப்பிட்டு கண்டித்தாராம்.

இன்னொரு பக்கம் தற்போது நடிகர் விஷ்ணு விஷாலும் தனது பங்கிற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீது குறை கூறி வருகிறார். அதாவது இந்த படத்திற்காக 43 நாட்கள் தான் ஐஸ்வர்யா கால்சீட் தான் கேட்டிருந்தார் என்றும் ஆனால் அதைவிட இரு மடங்கு நாட்கள் என்னை வைத்து படப்பிடிப்பு நடத்தினார் என்றும் பார்ப்பவர்களிடம் குறை கூறி வருகிறாராம். அதே சமயம் இந்த படம் வெற்றி பெற்றிருந்தால் இந்த வார்த்தைகள் எல்லாம் அவரிடம் இருந்து வருமா என்ன ?

Must Read

spot_img