spot_img
HomeNewsமுன்கூட்டியே இந்த வேலையை செய்ய வச்சிட்டீங்களே.. பரவால்ல ; சந்தோஷத்தில் விஷால்

முன்கூட்டியே இந்த வேலையை செய்ய வச்சிட்டீங்களே.. பரவால்ல ; சந்தோஷத்தில் விஷால்

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் ஆக்சன் நடிகர்கள் மிக முக்கியமானவர். நடிகர் சங்க செயலாளர் என்கிற பொறுப்பிலும் இருப்பவர். இவர் நடிகரானதே ஒரு விபத்து தான். நடிகரும் இயக்குனருமான அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி டைரக்ஷன் துறையில் தான் நுழைய வேண்டும் என இலட்சியத்தோடு இருந்தார். ஆனால் காலம் இவரையும் அழைத்து வந்து நடிக்க வைத்து இன்று முன்னணி ஹீரோவாகவே மாற்றி விட்டது.

இருந்தாலும் விரைவில் படம் இயக்குவேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தார் விஷால். இதற்கிடையே துப்பறிவாளன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் மிஸ்கினுடன் இணைந்து துப்பறிவாளன் 2 படத்தை ஆரம்பித்தார் விஷால். படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு கொஞ்ச நாட்கள் நடப்பதற்கு உள்ளாகவே இவர்கள் இருவருக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு மிஸ்கின் அந்த படத்தில் இருந்து விலகிச் சென்றார்.

இந்த நிலையில் தற்போது துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்குவதாக அறிவித்து இதற்காக வெளிநாட்டிற்கு லொகேஷன் பார்க்கவும் கிளம்பிவிட்டார் விஷால். மேலும் மிஸ்கினுக்கு ஜாடை மாலையாக இவர் கூறும்போது, “யாருடைய குழந்தையும் நான் பாதியில் கை விட்டுவிட மாட்டேன்.. நன்றாக வளர்ப்பேன்.. துப்பறிவாளன் 2வையும் நல்லவிதமாக எடுப்பேன். கொஞ்சம் முன்கூட்டியே என்னை டைரக்ஷனில் இறங்க வைத்ததற்காக நன்றி மிஷ்கின் சார்..” என்று கொஞ்சம் நக்கலாகவே கூறியுள்ளார் விஷால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img