spot_img
HomeNewsஎன்னால் திருப்தி அடைய முடியவில்லை ; ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்

என்னால் திருப்தி அடைய முடியவில்லை ; ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்

பெரும்பாலும் நட்சத்திர நடிகர்களின் பெண் வாரிசுகள் சினிமாவில் பெரிய அளவில் ஜொலிப்பதில்லை. வெகு சிலரே தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு நிலையான இடத்தை பெறுகிறார்கள். அப்படி கடந்த 15 வருடங்களாக கணக்கிட்டுப் பார்த்தால் கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தென்னிந்திய அளவில் ஒரு மிகப்பெரிய கதாநாயகியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.

அனைத்து முன்னணி இளம் ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். சிரஞ்சீவி போன்ற பெரிய ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடிக்க தயங்குவதில்லை. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். ஆனால் இது படத்திற்காக அல்ல.. ‘இனிமேல்’ என்கிற ஒரு இசை ஆல்பத்திற்காக.

இந்த இசை ஆல்பத்திற்கு ஸ்ருதிஹாசனே இசை அமைத்துள்ளார். கமல் இதற்கான பாடலை எழுதியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இதில் நாயகனாக நடிக்க ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் பேசும்போது, “எந்த ஒரு படத்தில் நடித்த பின்பும் அந்த படம் எவ்வளவுதான் வெற்றிகரமாக ஓடினாலும் எனக்கு மகிழ்ச்சியோ திருப்தியோ ஏற்பட்டது இல்லை. இன்னும் அடுத்த படத்தில் இதைவிட பெட்டராக செய்ய வேண்டும் என்று தான் நினைப்பேன். திருப்திப்பட்டுக் கொண்டால் அதனுடன் ஓட்டம் நின்று விடும். நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img