spot_img
HomeNewsஹரிஷ் கல்யாணுக்கு சினிமாவில் பிரச்சனை.. அம்மா நடிகைக்கு நிஜத்திலேயே பிரச்சனையானது

ஹரிஷ் கல்யாணுக்கு சினிமாவில் பிரச்சனை.. அம்மா நடிகைக்கு நிஜத்திலேயே பிரச்சனையானது

தமிழ் சினிமாவில் அவ்வப்போது புதிது புதிதாக பல அம்மா நடிகைகள் உருவாவார்கள். பெரும்பாலும் இவர்கள் ஒரு காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்தவர்கள், அதன் பிறகு காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அக்கா, அண்ணி வேடங்களில் நடித்து கொஞ்சம் வயதானதும் அம்மா வேடத்திற்கு மாறிவிடுவார்கள்.

அப்படி நீண்ட நாட்களாக ரசிகர்கள் மனதில் அம்மா என்றாலே ஆழப் பதிந்தவர் நடிகை சரண்யா தான். யாருடன் எந்த வம்பு தும்புக்கும் போகாதவர் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் இவர் மீது இவரது பக்கத்து வீட்டுப் பெண் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார் என்பதுதான் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கிறது.

விஷயம் இதுதான்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் இணைந்து நடித்த பார்க்கிங் என்கிற படம் வெளியானது அல்லவா ? அதில் கார் பார்க்கிங் பிரச்சினையை மையப்படுத்தி தான் இருவருக்கும் மிகப்பெரிய அளவில் பிரச்சனை வெடிக்கும்.

அதேபோலத்தான் சரண்யாவுக்கும் அவரது பக்கத்து வீட்டு பெண்மணிக்கும் இந்த கார் நிறுத்துவது தொடர்பாக ஏற்கனவே சில வாக்குவாதங்கள் நடந்தனவாம். இந்த நிலையில் நேற்று பக்கத்து வீட்டு பெண்மணி தனது காம்பவுண்ட் கேட்டை திறந்த போது வெளியே நின்று இருந்த சரண்யாவின் கார் மீது அது உரசியதாக சொல்லப்படுகிறது.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதைத் தொடர்ந்து தன்னை அவதூறாக திட்டியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சரண்யா மீது புகார் அளித்திருக்கிறார் பக்கத்து வீட்டு பெண்மணி. இது குறித்து சில சிசிடிவி காட்சிகளையும் கொடுத்திருக்கிறாராம். என்ன நடந்திருக்குமோ என்பது இனி விசாரணையில் தான் தெரிய வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img