spot_img
HomeNewsகாலி ஷாம்பு பாட்டிலை கூட விட்டு வைக்க மாட்டார் இந்த ஹீரோ

காலி ஷாம்பு பாட்டிலை கூட விட்டு வைக்க மாட்டார் இந்த ஹீரோ

சினிமாவை பொறுத்தவரை கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பலர், ஒரு காலத்தில் சாதாரண அடித்தட்டு, நடுத்தர வர்க்க பின்னணியில் இருந்து வந்தவர்கள் தான். அப்படி வந்தவர்களில் நிறைய பேர் தாங்கள் எங்கிருந்து வந்தோம் என்பதை மறந்து விட்டு பணம் வந்ததும் ஆடம்பர வாழ்க்கைக்கு மாறி விடுகின்றனர். ஆனால் பலர் தாங்கள் வந்த பாதையை நினைத்து பார்த்து அடக்கமாகவும் நடந்து கொள்கின்றனர்.

சீனியர் நடிகர்களுக்கு மட்டும் இந்த பக்குவம் வரும் என்று சொல்ல முடியாது/ இளம் நடிகர்களுக்கு கூட இது போன்ற சில விஷயங்கள் அவர்கள் இயல்பிலேயே ஊறி இருக்கும். அப்படி ஒருவர்தான் நடிகர் விஜய் தேவ கொண்டா. தெலுங்கில் நடித்து புகழ் பெற்று அதே சமயம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தவர் விஜய் தேவரகொண்டா.

இவரது நடிப்பில் விரைவில் பேமிலி ஸ்டார் என்கிற படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாக சமீபத்தில் ஒரு நிகழ்வில் இவரும் சிரஞ்சீவியும் இணைந்து கலந்து கொண்டனர், அப்போது இவ்வளவு சம்பாதித்தாலும் கூட இன்னும் நீங்கள் நடுத்தர காலகட்டத்தில் இருந்தபோது உங்கள் கூடவே இருந்த பழக்கம் எதையாவது இப்போதும் தொடர்கிறீர்களா என்று விஜய் தேவரகொண்டாவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், “ஆமாம் நான் உபயோகிக்கும் ஷாம்பு பாட்டில் காலியாகிவிட்டால் உடனே தூக்கி எறியாமல் கொஞ்சம் தண்ணீரை அதற்குள் ஊற்றி மிச்சம் இருக்கும் ஷாம்புவையும் ஒரு குலுக்கு குலுக்கி அதையும் ஓரிரு நாட்களுக்கு பயன்படுத்துவேன்.இப்போதும் அந்த பழக்கம் என்னிடம் இருக்கிறது” என்று கூறி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img