spot_img
HomeNews2.0 ரஜினிக்கு அடுத்து நான் தான் ; ராஷ்மிகா மந்தனா

2.0 ரஜினிக்கு அடுத்து நான் தான் ; ராஷ்மிகா மந்தனா

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் எந்திரன். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக எந்திரன் 2வை உருவாக்கினார் ஷங்கர். ஆனால் சன் பிக்சர்ஸ் எந்திரன் பட டைட்டிலை வைக்க கூடாது என கூறிவிட்டதால் அதற்கு பதிலாக 2.0 என டைட்டில் வைத்தார் ஷங்கர். அதாவது எந்திரனின் இரண்டாவது வெர்ஷன் என்பது அர்த்தம்.

இந்த நிலையில் இதே போன்று என்னையும் ஸ்ரீ வள்ளி 2.0 ஆக பார்ப்பீர்கள் என கூறியுள்ளார் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா. என்ன காரணம் என்று கேட்கிறீர்களா ? கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா.

இந்த படத்தில்  ஸ்ரீ வள்ளி என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். தற்போது புஷ்பா 2 திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படம் வெளியாகும் போது பார்த்தீர்கள் என்றால் ஸ்ரீவள்ளி 2.0 என்று சொல்வது போல என்னுடைய நடிப்பில் இன்னும் வித்தியாசத்தை பார்க்கலாம் என்று கூறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img