spot_img
HomeNewsதனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து பின்னணியில் இருக்கும் அடடே காரணம்

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து பின்னணியில் இருக்கும் அடடே காரணம்

சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர தம்பதிகள் எல்லோருமே கடைசி வரை ஒற்றுமையாக வாழ்ந்து விடுகிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒரு நடிகர், நடிகை தங்களது வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிலர் பிரிந்து வாழ்கின்றனர்.

சிலர் தைரியமாக விவாகரத்து பெற்று தங்களுக்கு பிடித்த வேறு ஒரு துணையை தேடிக்கொண்டு வாழ்க்கையை நடத்துகின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கிட்டத்தட்ட 20 வருடம் ஆகும் நிலையில் கடந்த வருடம் தாங்கள் இருவரும் மனம் ஒத்து பிரிவதாக அறிவித்து திரை உலகத்தினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்தனர்.

அதன் பிறகு இவர்கள் இருவரின் தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அக்டோபர் மாதம் இவர்களை நேரில் ஆஜராக சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த பிரிவு என்று வெளிப்படையாக எந்த காரணமும் தெரியாவிட்டாலும் தற்போது புதிதாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

அதாவது லிவ்விங் ரிலேஷன்ஷிப் என்று சொல்லப்படுவது போல சிச்சுவேஷன்ஷிப் என்கிற ஒரு புதிய வாழ்க்கை முறையில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கிறார்களாம். அதாவது நம் இருவருக்கும் யார் ஒருவரை பிடிக்காமல் போனாலும் எந்தவித சலசலப்பும் சச்சரவும் இல்லாமல் அமைதியாக பிரிந்து விட வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம்.

அதன் பிறகு அவரவர் வாழ்க்கையை அவரவர் பார்த்துக் கொள்ளலாம். அதில் யாரும் யாருடைய முடிவிலும் தலையிடக்கூடாது என்று ஏற்கனவே பேசி வைத்திருந்தார்களாம். அதன்படி சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் செட் ஆகவில்லை என்பதால் இந்த சிச்சுவேஷன்ஷிப் ஒப்பந்தப்படி பிரிந்து விட முடிவெடுத்துள்ளார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img