spot_img
HomeNewsநன்றி மறக்க கூடாது ; பிரபல இயக்குனரை வறுத்தெடுத்த திரவுபதி இயக்குனர்

நன்றி மறக்க கூடாது ; பிரபல இயக்குனரை வறுத்தெடுத்த திரவுபதி இயக்குனர்

கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்னவென்றால் பா. ரஞ்சித் ரஜினி குறித்த கேள்விக்கு கிண்டலாக கொடுத்த ரியாக்ஷன் குறித்து தான். அதாவது சமீபத்தில் ஒரு பேட்டியில் பேட்டியாளர் கபாலி, காலா போன்ற படங்களில் நீங்கள் என்ன விஷயங்களை சொல்கிறீர்கள் என்பதை ரஜினிகாந்த் புரிந்துதான் நடித்தாரா, நான் அப்படி நினைக்கவில்லை என்று கேட்டதற்கு பதில் சொல்லாமல் நக்கலாக சிரித்தார். பா ரஞ்சித்.

இது அவர் மீது ரஜினி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அப்படி தான் சிரித்ததை விமர்சித்து குறித்து கூட மீண்டும் ஒரு வீடியோவாக வெளியிட்டு நான் சிரித்ததில் ஒன்றும் தவறு இல்லை என்பது போன்று சப்பைக்கட்டு கட்டி இருந்தார் பா. ரஞ்சித். இது ரசிகர்கள் மட்டுமல்ல திரையுலாகச் சேர்ந்தவர்களிடமும் கூட கோபத்தை ஏற்படுத்தியது.
இதில் முதல் ஆளாக திரவுபதி புகழ் இயக்குனர் மோகன் ஜி, பா ரஞ்சித்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். சமீபத்திய இசை வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசும்போது, “பா ரஞ்சித் ரஜினியை வைத்து படம் இயக்கவில்லை என்றால் இன்று அவர் யார் என்றே தெரியாது. அவருக்கு அடையாளம் கொடுத்தவர் ரஜினிகாந்த். அந்த நன்றியை மறந்து விட்டு பேசுகிறார்.
எனது முதல் படத்தில் ஹீரோவாக நடித்தவர் ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட். நான் யார் என்று தெரியாத நிலையிலும் எனக்கு அவர் ஒரு வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு அடுத்த படங்களில் என்னை நம்பி ஒப்படைத்தார். நான் எந்த மேடை சென்றாலும் அவருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்து விட்டு தான் பேசவே ஆரம்பிக்கிறேன்.
ஆனால் பா ரஞ்சித்திற்கு இவ்வளவு உயரத்தை தந்த ரஜினிகாந்தை அவர் மறந்துவிட்டது மட்டுமல்லாமல் கிண்டலடித்திருப்பதும் கண்டனத்திற்கு உரியது” என்று காட்டமாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img