spot_img
HomeNewsகோட் பாடலால் சங்கடமா ? மீட்பு பணியில் இறங்கிய யுவன் குழுவினர்

கோட் பாடலால் சங்கடமா ? மீட்பு பணியில் இறங்கிய யுவன் குழுவினர்

பிரபலங்கள் எல்லோருமே சோசியல் மீடியா கணக்கு வைத்திருக்கிறார்களா என்றால் இல்லை. அப்படி வைத்திருப்பவர்களும் தொடர்ந்து அதன் மூலம் தாங்கள் சொல்ல விரும்பும் செய்திகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு அடிக்கடி அப்டேட்டில் இருக்கிறார்கள் என்றால் அதுவும் குறைதான்.

அப்படி சில பேர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இல்லாத சமயத்தில் திடீரென அவர்களது கணக்குகள் ஹேக்கிங் செய்யப்படுவதோ அல்லது சோசியல் மீடியாவில் இருந்து நீக்கப்படுவதோ நடப்பது வாடிக்கைதான். அந்த வகையில் தற்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் கணக்கும் டிவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான விஜய்யின் பாடல் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை என்பதால் பலரும் அனிருத்தையும் யுவன் சங்கர் ராஜாவையும் ஒப்பிட்டு விமர்சித்து வருகிறார்கள் என்கிற காரணத்தால் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் கணக்கை விட்டு வெளியேறி விட்டார் என்று சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள யுவன் இப்போது தான் இது எனக்கு தெரிய வந்தது. என்னுடைய குழுவினர் என்னுடைய கணக்கை மீட்கும் பணியில் இறங்கி உள்ளனர் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img