spot_img
HomeNewsவாக்களிக்க வந்த சூரிக்கு வாக்குச்சாவடியில் நடந்த அநியாயம்

வாக்களிக்க வந்த சூரிக்கு வாக்குச்சாவடியில் நடந்த அநியாயம்

இன்று பாராளுமன்ற தேர்தல் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. கடந்த வருடங்களை விட இந்த தடவை வாக்கு சதவீதம் அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த முறை இளைய தலைமுறை வாக்களிக்கும் ஆர்வத்தில் இருப்பதால் இந்த அளவிற்கு வாக்கு சதவீதம் அதிகரித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

அது மட்டும் அல்ல ரஜினி கமல் விஜய் அஜித் என திரையுலக பிரபலங்கள் பலரும் காலையில் முன்கூட்டியே வந்து தங்களது வாக்குகளை செலுத்தினார்கள். இதனால் அவர்களது ரசிகர்களும் ஆர்வமாக தங்களது வாக்குகளை செலுத்தினார்கள்.

அந்த வகையில் நடிகர் சூரி தனது வாக்கை செலுத்துவதற்காக தன் மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்தார். ஆனால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றும் அவரது மனைவி பெயர் தான் இருக்கிறது என்றும் தேர்தல் அதிகாரிகள் கூறி விட்டனர். இதனால் வேறு வழி என்று சூரியின் மனைவி மட்டும் வாக்களித்தார். சூரியால் வாக்களிக்க முடியவில்லை.

இது குறித்து வேதனையுடன் பகிர்ந்து கொண்ட சூரி, இதுவரை வந்து அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து வாக்களித்து வந்தேன் இந்த முறை வாக்களிக்க நினைத்த எனக்கு இப்படி எதிர்பாராத அதிர்ச்சி கொடுத்து விட்டார்கள். எப்படி வாக்காளர் பட்டியலில் இருந்து என் பெயர் விடுபட்டது, இது யார் தவறு என்று தெரியவில்லை மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img