spot_img
HomeNewsதனது திரையுலக பயணத்தில் முதன்முறையாக 171வது படத்தில் இந்த விஷயத்தை செய்த ரஜினி

தனது திரையுலக பயணத்தில் முதன்முறையாக 171வது படத்தில் இந்த விஷயத்தை செய்த ரஜினி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171 வது படத்திற்கு தற்போது கூலி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு எழுத்துக்களில் டைட்டில் மாஸாக இருக்கிறது என ரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் மிதக்கிறார்கள்.

ஆனால் இதில் பல பேருக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் கடந்த 29 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் இதே கூலி என்கிற பெயரில் ஒரு படம் வெளியானது. அந்தப் படத்தை தொடர்ந்து தான் பி.வாசு, ரஜினியை வைத்து இதே பெயர் வருமாறு உழைப்பாளி என்கிற படத்தையும் இயக்கினார்.

பொதுவாகவே ரஜினிகாந்த் பாபா, படையப்பா, அருணாச்சலம், அண்ணாமலை என தனது படங்களின் டைட்டிலை அவர்தான் முடிவு செய்து அறிவிப்பார். பெரும்பாலும் இறைவன் அவரது கனவில் வந்து இந்த டைட்டில் வைக்கும்படி கூறியதாகவும் சில நேரங்களில் அவர் சொல்லி இருக்கிறார்.

இப்போது எல்லாம் இளம் இயக்குனர்கள் காலம் என்பதால் அவர்களது இஷ்டப்படி பேட்ட, தர்பார், ஜெயிலர் என டைட்டிலை வைப்பதற்கு விட்டு விடுகிறார். இந்த நிலையில் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். என்றாலும் அது சந்திரமுகி படத்தில் அவர் நடித்த ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான்.

அதே சமயம் இதுநாள் வரை ரஜினி படங்களின் டைட்டிலை தங்களது படங்களுக்கு வைப்பதற்கு தான் மற்ற ஹீரோக்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள். தற்போது தனது திரையுலக பயணத்தில் முதல் முறையாக இன்னொரு ஹீரோ நடித்த டைட்டிலில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்பது ஆச்சரியமான விஷயம்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img