spot_img
HomeNewsரத்னம் பட கதாநாயகிக்கு இப்படி ஒரு அநியாயம் நடந்திருக்கிறதா ?

ரத்னம் பட கதாநாயகிக்கு இப்படி ஒரு அநியாயம் நடந்திருக்கிறதா ?

ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கும் மிக முக்கிய காரணங்களில் ஒன்று அந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகள் தான். படத்தை எடுத்தால் மட்டும் போதாது. ரசிகர்களிடம் பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்க்க பாடுபட வேண்டும். பெரும்பாலும் தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக இயக்குனர்களும் ஹீரோக்களும் கூட இப்படி புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் பல கதாநாயகிகள் தங்களது பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை.

படப்பிடிப்பு, டப்பிங்குடன் தங்களது வேலை முடிந்து விட்டது என்று நினைக்கிறார்கள். அந்த வகையில் தற்போது விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள ரத்னம் படம் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆனால் இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் எதிலும் படத்தின் நாயகி ப்ரியா பவானி சங்கர் கலந்து கொள்ளவில்லை.

இத்தனைக்கும் இதற்கு முன்பு ஹரி இயக்கிய படத்திலும் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர்தான் நடித்திருந்தார். புரமோஷன் நிகழ்ச்சிகளில் விஷால், ஹரி இருவரும் பேசும்போது பிரியா பவானி சங்கர் வேறு ஏதோ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் வர முடியவில்லை என்று சொன்னார்கள்.

ஆனால் விசாரித்தால் பிரியா பவானி சங்கர் கிட்டத்தட்ட 10 நாட்கள் இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கி கொடுத்துள்ளாராம். இதனால் வேறு எந்த படத்தின் படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவரிடம் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சொல்லி தேதிகளையும் வாங்கிவிட்டு அவரை அழைக்காமலேயே நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்களாம்.

அதுமட்டுமல்ல ப்ரமோஷன் போஸ்டர்களில் கூட பிரியா பவானி சங்கரை இருட்டடிப்பு செய்கிறார்கள் என்றே சொல்லப்படுகிறது. அப்படி என்ன நடந்திருக்குமோ ? விரைவில் வெளிச்சத்துக்கு வரலாம.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img