spot_img
HomeNewsதனுஷின் இரண்டு படங்களால் மாநகரம் நடிகருக்கு கிடைத்த மறுவாழ்வு

தனுஷின் இரண்டு படங்களால் மாநகரம் நடிகருக்கு கிடைத்த மறுவாழ்வு

லோகேஷ் கனகராஜ் இன்று விஜய், கமல், ரஜினியை வைத்து இயக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டாலும் அவரது முதல் படத்தில் ஹீரோவாக நடித்தவர் தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷன். ஆனாலும் இவர் தமிழில் தான் முதலில் அறிமுகமானார். இங்கே இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் தெலுங்கில் வரவேற்பு கிடைத்ததும் அங்கேயே நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இடையில் சி.வி குமார் இயக்கத்தில் மாயவன் என்கிற படத்தில் நடித்தார். அந்த படம் ஓரளவு பேசப்பட்டது. ஆனாலும் அதன்பிறகு தமிழில் அவருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. இந்த நிலையில் கடந்த வருடம் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சந்தீப் கிஷன்.

தனுசுக்கு அவரை ரொம்பவும் பிடித்து விடவே தற்போது தான் இயக்கி நடித்து வரும் ராயன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து வருகிறார். இப்படி தனுஷின் இரண்டு படங்களில் நடிக்கும் அளவிற்கு தற்போது லைம்லைட்டில் சந்தீப் வந்து விட்டதால் ஏற்கனவே அவரை வைத்து மாயவன் திரைப்படத்தை இயக்கிய சிவி குமார் அவர் இரண்டாம் பாகமாக இவரை வைத்து மாயா ஒன் என்கிற படத்தை துவங்கி விட்டார். இப்படி தனுஷ் படம் மூலமாக சந்தீப் கிஷனுக்கு தமிழில் மீண்டும் மறுவாழ்வு கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img