spot_img
HomeNewsஅந்த விஷயம் தெரிஞ்சா நான் கடவுள் ஆயிடுவேன் ; ஜெயிலர் நடிகர் உற்சாகம்

அந்த விஷயம் தெரிஞ்சா நான் கடவுள் ஆயிடுவேன் ; ஜெயிலர் நடிகர் உற்சாகம்

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் வேற்று மொழி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெறுவது தொடர்ந்து வருகிறது. குறிப்பாக கன்னட திரை உலகில் இருந்து பெரிய அளவில் நட்சத்திரங்கள் இங்கே வராமல் இருந்த நிலையில் கடந்த வருடம் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பராக இணைந்து நடித்திருந்தார் கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிவராஜ் குமார்.

படத்தில் ஆரம்பத்தில் ஐந்து நிமிடமும் கிளைமாக்ஸ் 2 நிமிடமும் மட்டுமே அவர் வருகிறார் என்றாலும் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் அவரது மாஸ் என்ட்ரி ரஜினிக்கு இணையான வரவேற்பை அவருக்கு பெற்றுக் கொடுத்தது. சமீபத்தில் அவரிடம் தமிழ் ரசிகர்கள் எப்படி உங்கள் மீது இந்த அளவிற்கு அன்பை பொழிகிறார்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் அந்த உண்மை மட்டும் எனக்கு தெரிந்து விட்டால் நான் நிஜமாகவே கடவுள் ஆகி விடுவேன். ஏன் என்றே தெரியவில்லை அவர்கள் என் மீது பாசம் காட்டுகிறார்கள். ஒருவேளை நான் எளிமையாக இருப்பதால் அதை விரும்புகிறார்களோ என்று தன்னடக்கத்துடன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img