spot_img
HomeNewsதப்பா நினைச்சுட்டேன்.. இயக்குனர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட நடிகை

தப்பா நினைச்சுட்டேன்.. இயக்குனர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட நடிகை

சில கதாநாயகிகள் அறிமுகமான காலகட்டத்தில் அமைதியாக இருப்பார்கள். மூன்று நான்கு படங்கள் ஓடி முன்னணி நடிகையாக மாறியபின் இயக்குனர்களிடம் குறிப்பாக தன்னை வளர்த்து விட்ட இயக்குனர்களிடமே சிலர் பந்தா காட்டுவது உண்டு. ஆனால் ஒரு நடிகை தனது முதல் படத்திலேயே தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனருடன் சண்டை போட்டு பின் அவரிடமே மன்னிப்பு கேட்ட சுவாரசிய நிகழ்வு தற்போது வெளியே வந்துள்ளது.

அவர் வேறு யாரும் அல்ல. நடிகையும் இயக்குனர் பார்த்திபனின் மனைவியுமான சீதா தான். இவர் பாண்டியராஜன் இயக்கிய ஆண்பாவம் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த ஒரு படமே இவரை ஓஹோ என உச்சத்துக்கு கொண்டு சென்றது.

ஆனால் படப்பிடிப்பில் இயக்குனர் பாண்டியராஜனுக்கு தேவையில்லாத சில குடைச்சல்களை கொடுத்து தன்னை அறியாமலேயோ அல்லது அறிந்தோ இடைஞ்சல் கொடுத்தார் சீதா. அப்போதெல்லாம் ஃபிலிம் ரோல் என்பதால் இவரை நடிக்க வைப்பதற்காகவே நிறைய ஃபிலிம் ரோல் வீணானது. அதனால் பொருட்செலவும் ஏற்பட்டது. எப்படியோ ஒரு வழியாக படப்பிடிப்பு முடிவடைந்தது.

சீதாவுக்கு பதிலாக வேறு ஒருவரை டப்பிங் பேச வைக்க பாண்டியராஜன் முடிவு செய்தார். ஆனால் நான்தான் டப்பிங் பேசுவேன் என பிடிவாதம் பிடித்தார் சீதா. ஆனால் அவர் குரல் செட்டாகாததால் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை டப்பிங் பேச வைத்தனர்.

முழு படமும் முடிந்து போட்டு பார்த்தபோது அதை பார்த்த சீதா இந்த படத்தில் தன்னை இவ்வளவு அழகாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக பாண்டியராஜன் காட்டியிருப்பதை பார்த்ததும் அவர் மேல் தனியாக ஒரு மரியாதை ஏற்பட்டு உடனடியாக அவரது காலில் விழுந்து உங்களைப் பற்றி நான் தப்பாக நினைத்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று கதறியுள்ளார். சில பேருக்கு அப்படித்தான்.. சிலர் அருமை லேட்டாக தான் தெரியும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img