spot_img
HomeNewsஒவ்வொரு குழந்தைக்கும் எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுகிறார் திரிஷா !

ஒவ்வொரு குழந்தைக்கும் எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுகிறார் திரிஷா !

 

இது குறித்து பேசுவதற்கும் , விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் 3000 இளம் தலைவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார் .

யுனிசெப் நிறுவனத்தின் நல் எண்ண தூதுவர் மற்றும் பிரபல தென்னிந்திய திரைப்பட நட்சத்திரமான செல்வி .த்ரிஷா கிருஷ்ணன் , குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறையும் முடிவுக்கு கொண்டுவர 3000 இளைஞர்கள் இதுகுறித்து பேசவும் , செயல்படவும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார் .

வன்முறையை முடிவுக்கு கொண்டுவருதல் குறித்து இளைஞர்கள் மத்தியில் த்ரிஷா பேசுகையில் , “2014 முதல் 2016  வரை போஸ்கோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை எடுத்துரைத்தார் .தேசிய குற்றப்பிரிவு பணியகத்தின் 2016 ஆம் ஆண்டு அறிக்கையின்படி , 2014 ஆம் ஆண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் சுமார் 9000 , 2015 இல் இது 15000 வழக்குகள் , 2016 இல் 36000 வழக்குகளாக இருமடங்காகிவிட்டது .” குற்றங்கள் மற்றும் குழந்தை பாலியில் துன்புறுத்தல்கள் , நம்பிக்கைக்குரிய குழந்தைகளுக்கு தெரிந்த நபரால் செய்யப்படுகின்ற என அவர் தெரிவித்தார் . பாலியல் துன்புறுத்துதல் வழக்குகளில் குற்றவாளிகள் 95 % பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்கள் ” இது நமது குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழலை எடுத்துக்காட்டுகிறது .

சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் சிறுவர் ,சிறுமியர் ,பெண்கள், ஆண்கள் இவர்களுக்கிடையிலான ஆணாதிக்க தன்மையை நிலை நிறுத்தும் செயல்பாடுகள்  அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என சபதம் ஏற்கவும், செயல்படவும், இந்திய மக்கள் தொகையில்  40 % சதவிகிதமாக இருக்கும் இளைஞர்களுக்கு  அழைப்பு விடுத்தார் .குற்றவாளிகளை இவ்வகையான கொடூரமான குற்றங்களில் இருந்து தப்பிக்க ஊக்குவிக்கும் பல ஆண்டு காலங்களாக இருந்து வரும் அமைதி காத்தல் எனும் கலாச்சாரத்திற்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்திக் கூறினார்.

யுனிசெப் நிறுவனத்தின் தகவல்தொடர்பு வல்லுநர்  சுகட்டா  ராய் , திரிஷாவின் கருத்துகளை எதிரொலிப்பதாகவே பேசினார் .
வவளரும் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களின் குரல் அவர்களின் வாழ்வை பாதிக்கும் விஷயங்களில் உரக்கக் கேட்க வில்லை என்றார் .அவர்களுக்காக திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்க ஊக்கப் படுத்தப்படவில்லை .அது பெயரளவிற்க்கானாலும் சரி ,முக்கியத்துவமானதாக இருந்தாலும் சரி குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை ஒலிக்கும் இதுபோன்ற நிகழ்வுகளில் இளைஞர்கள் பங்கேற்பதும் , பேசுவதும் ஒரு சமூகமான சூழ்நிலையை உருவாக்குவதற்கான ச ரயான தருணம் இதுவாகும் என கூறினார்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் இந்த செயலானது ஒரு தனித்துவமான மற்றும் யுனிசெப் மற்றும் ஐக்கிய நாட்டு  நிறுவனங்கள் அரசாங்கம் ,அரசு சாரா நிறுவனங்கள் இளைஞர்கள் மற்றும் சாதனையாளர்களின் ஒருங்கிணைந்த முயற்சியாகும் .இவர்களது குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான் .அது இந்த உலகில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஒன்றாக மாற்றுவது”

இந்த நிகழ்ச்சியினை யூனிசெப் உடன் இணைந்து தோழமை நிறுவனம் மற்றும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி ஏற்பாடு செய்திருந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img