spot_img
HomeNewsபா.இரஞ்சித் தயாரிப்பில்  கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட புதிய  படத்தின் படப்பிடிப்பு துவக்கம்.

பா.இரஞ்சித் தயாரிப்பில்  கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட புதிய  படத்தின் படப்பிடிப்பு துவக்கம்.

பா.இரஞ்சித் தயாரிப்பில்  கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட புதிய  படத்தின் படப்பிடிப்பு துவக்கம்.

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ், மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கும்
படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது.

கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட  இந்தபடத்தில்
அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் கீர்த்திபாண்டியன் , திவ்யா துரைசாமி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.

O2 ,  தம்மம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தமிழழகன்  இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

அரக்கோணம்  சுற்றுவட்டாரபகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது.  தமிழகத்தின் நகரங்கள் , ஊர்களின் கிரிக்கெட் விளையாட்டின் உணர்வுப்பூர்வமான ஒரு வாழ்வியலையும் , நட்பு , கொண்டாட்டங்களையும் ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும் படியான கதையமைப்பில் உருவாக்கி இன்று முதல் படப்பிடிப்பை துங்குகிறார்கள்.

திரைக்கதை வசனம், – தமிழ்பிரபா மற்றும் ஜெய்குமார்..

இயக்கம் – ஜெய்குமார்.

தயாரிப்பு-
லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி,
நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித்.

கலை – ரகு
எடிட்டிங் – செல்வா RK
உடைகள்- ஏகாம்பரம் .
ஸ்டில்ஸ் – ராஜா

பி ஆர் ஓ – குணா.

Must Read

spot_img