spot_img
HomeNewsகருங்காலி மாலை க்கு நான் ஏஜெண்டா ? லோகேஷ் கனகராஜ் விளக்கம்

கருங்காலி மாலை க்கு நான் ஏஜெண்டா ? லோகேஷ் கனகராஜ் விளக்கம்

 

லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதற்கான வேலைகள் தற்போது துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே சுருதிஹாசன் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘இனிமேல்’ என்கிற ஆல்பத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இது குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இது தொடர்பான பேட்டிகளில் லோகேஷ் கனகராஜிடம் நீங்கள் கருங்காலி மாலை அணிந்தது எதனால், இதற்குப் பின்னால் கருங்காலி மாலை பிசினஸ் ஏதும் செய்கிறீர்களா என்று ஜாலியாக கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறுகையில், “ஒரு முறை படப்பிடிப்பு முடிவடைந்து காரில் திரும்பும்போது கார் விபத்துக்கு உள்ளானது. நல்ல வேலையாக யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை. இருந்தாலும் இதை ஒரு சகுன தடையாக கருதிய என்னுடைய ஒளிப்பதிவாளர் திடீரென ஒரு நாள் ஒரு கருங்காலி மாலையை என் கழுத்தில் அணிவித்து இது உனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கூறினார்.

அவருடைய நம்பிக்கையை கெடுக்க வேண்டாமே என்பதற்காக இந்த கருங்காலி மாலையை அணிந்து கொண்டேன். மற்றபடி இந்த கருங்காலி மாலைக்கு நான் ஒன்றும் ஏஜெண்டும் அல்ல. இதை வைத்து நான் பிசினஸ் பண்ணவும் இல்லை” என்று ஜாலியாக பதில் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img