spot_img
HomeNews33 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் மீண்டும் இணைந்த பிரம்மச்சாரி நடிகை

33 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் மீண்டும் இணைந்த பிரம்மச்சாரி நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்கும் ஆசை எல்லா கதாநாயகிகளுக்கும் இருக்கும். அப்படி தாங்கள் பீக்கில் இருந்தபோது இணைந்து நடிக்க முடியாத சிம்ரன், திரிஷா போன்ற நடிகைகள் அதன்பிறகு பல வருடங்கள் கழித்து பேட்ட படத்தில் இணைந்து நடித்து தங்களது ஏக்கத்தை தீர்த்துக் கொண்டனர்.

அவ்வளவு ஏன் யாருமே எதிர்பார்க்காத நடிகை ஈஸ்வரி ராவ் கூட காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இன்னொரு பக்கம் ஏற்கனவே ரஜினியுடன் இணைந்து நடித்தாலும் அதே சமயம் படையப்பா படத்தில் ஜோடி சேர முடியாமல் போன ரம்யா கிருஷ்ணன் கூட ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் மனைவியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அந்த வகையில் கடந்த 35 வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த்துடன் சிவா மற்றும் தளபதி என இரண்டு படங்களில் நடித்தவர் நடிகை ஷோபனா. தற்போது 33 வருடங்களுக்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் அவருடன் இணைந்து நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img