spot_img
HomeNewsநம்ப முடியாத ஹீரோயின் காம்பினேஷனுடன் மீண்டும் இயக்குனராக ரீ என்ட்ரி கொடுக்கும் சசிகுமார்

நம்ப முடியாத ஹீரோயின் காம்பினேஷனுடன் மீண்டும் இயக்குனராக ரீ என்ட்ரி கொடுக்கும் சசிகுமார்

 

சுப்பிரமணியபுரம் படம் மூலம் ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் இரண்டிலுமே வெற்றிகரமாக அறிமுகமாகி ரசிகர்களிடம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் சசிகுமார். அதன் பிறகு நாடோடிகள், சுந்தரபாண்டியன் என தொடர்ந்து அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

அதே சமயம் அவர் இரண்டாவதாக இயக்கிய ஈசன் திரைப்படம் தோல்வியை தழுவியது. அதனால் இயக்குனராக பயணிப்பதை விட ஹீரோவாகவே பயணிக்கலாம் என இத்தனை வருடங்களாக படம் இயக்காமல் ஹீரோவாகவே அதே சமயம் பிசியான நடிகராகவும் நடித்து வருகிறார்.

ஆனாலும் அவருக்குள் இருக்கும் இயக்குனர் எப்படியாவது படம் இயக்கி விட வேண்டும் என துடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் தான் கதாநாயகியை மையப்படுத்திய கதை ஒன்றை சசிகுமார் உருவாக்கியுள்ளார். அது மட்டுமல்ல இந்த கதையை நயன்தாராவிடம் சொல்ல அவரும் கதையைக் கேட்டு திருப்தி அடைந்து இந்த படத்தில் நடிக்க சம்மதித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நயன்தாரா படத்துடன் சசிகுமார் ஒரு மாஸான ரீ என்ட்ரி என்று கொடுக்கிறார் என்பதே புதிதாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img